மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளுக்கான தலைவராக கிரேன் பொல்லார்ட் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் ஜேசன் ஹோல்டர் தொடர்ந்தும் தலைமைப் பொறுப்பினை ஏற்று வழி நடத்தவுள்ளார்.
மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராக ஜேசன் ஹொல்டரும், இருபதுக்கு -20 போட்டிகளுக்கான தலைவராக பிரித்வெய்ட்டும் செயற்பட்டு வந்தனர்.
நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் ஆடிய 10 போட்டிகளில் 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்று, 9 ஆம் இடத்தை பிடித்தது.
அது மாத்திரமல்லாது கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுடனான ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபதுக்கு - 20 தொடரிலும் ஒரு வெற்றியை கூட பதிவுசெய்து கொள்ளமுடியாமல் திணறிப் போனது.
இந் நிலையிலேயே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அந்த அணியின் தலைவர்களை மாற்ற அந் நாட்டு கிரிக்கெட் நிறுவனம் முடிவுசெய்தது.
இதையடுத்து ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளுக்கு தலைவராக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் ஆடியிருந்தார் பொல்லார்ட். அதன் பிறகு அவரை அணியில் சேர்க்கவில்லை. இருபதுக்கு - 20 போட்டிக்கும் அவர் தேர்வு செய்யப்படாமல் இருந்தார்.
இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு - 20 தொடரில் மாத்திரமே அவர் அதன் பிறகு சேர்க்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM