லண்டனின் மேற்கு பகுதியில் நான்கு மாடி குடியிருப்புத் தொகுதியில் கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தீ விபத்தானது லண்டனின் ஷெர்ப்ரூக் வேவிலுள்ள வொர்செஸ்டர் பூங்காவில் இடம் பெற்றுள்ளது.
தீயினை கட்டுப்பாட்டுகுள் கொண்டுவர 20 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 125 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீ பெரும் சுவாலையுடன் எரிவதனால், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் கடுமையாக ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருவதனால் குறித்த பகுதிக்கு மக்கள் வருகை தருவதை தவிர்க்குமாறும், உடனடியாக குறித்த பகுதியில் வசிப்பவர்களின் வீடுகளில் கதவு ஜன்னல்களை மூடிவைக்குாமறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லையெனவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லையெனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM