கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் வீழ்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையான தற்போது படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளை அடிப்படையாக கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் 166,975 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதப் பின்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் வீழ்ச்சியை சந்தித்து. குறிப்பாக ஏப்ரல் மாதம் 37,802 சுற்றுலாப் பயணிகளும், ஜூன் மாதம் 63,072 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
இதன் பின்னர் இலங்கையின் பாதுகாப்பானது உறுதிப்படுத்தப்பட்டதற்கு அமைவாக ஜூலை மாதம் முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி ஜூலை மாதம் 115,701 சுற்றுலாப் பயணிகளும், ஆகஸ்ட் மாதம் 143, 587 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை கடந்த ஆண்டு மொத்தமாக 2,333,796 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இந்த ஆண்டின் இதுவரையில் 1,267,737 பேர் வருகை தந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM