கொழும்பு, கோட்டை ரஜமகா விஹாரையின் நேற்றிரவு இடம்பெற்ற பெரஹராவின்போது இரு யானைகள் குழம்பியதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ரஜமஹா விஹாரையில் நேற்று சனிக்கிழமை இரவு 10.40 மணியளவில் இடம்பெற்ற பெரஹரா நிகழ்வுகளின் போது இவ்வாறு யானைகள் குழப்படைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரித்தது.
இதன்போது காயமடைந்த 17 பேரில் , 11 பெண்கள் உட்பட 13 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் , இரு பெண்கள் உட்பட மூவர் கலுபோவிலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண்ணொருவர் உட்பட இருவர் தொடர்ந்தும் சிகிகச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM