தலிபான் தலைவர்களுடனான இரகசிய பேச்சுவார்த்தையை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலிபானுடனான சமாதான முயற்சிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தலிபானின் முக்கிய தலைவர்களும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியும் காம்டேவிட்டில் என்னை இரகசியமாக சந்திக்கவிருந்தனர் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் அமெரிக்காவிற்கு புறப்படுவதற்கு முன்னர் தலிபான் தலைவர்கள் காபுலில் அமெரிக்க படைவீரர் ஒருவர் உட்பட 11 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளனர் என டிரம்ப் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நான் உடனடியாக சந்திப்பை இரத்துசெய்துவிட்டு சமாதான முயற்சிகளை இடைநிறுத்தியுள்ளேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தலிபான் தலைவர்களை அமெரிக்காவிற்கு பேச்சுவார்த்தைகளிற்கு அழைப்பது முன்னொருபோதும் இடம்பெறாத விடயம என்பதாலும் ஆப்கானில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள தலிபானிற்கு எதிரான போரில் முக்கிய திருப்புமுனை என்பதாலும் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல் அதிர்ச்சியளிக்கின்றது என முன்னாள் இராஜங்க திணைக்கள பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.
இது தலிபானிற்கு அரசியல் ரீதியில் மிகுந்த முக்கியத்துவத்தையும் பிரச்சாரத்தையும் வழங்கிவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM