கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நிலவும் வாகன நெறிசலை தவிர்க்க பொலிஸார் ஆலோசனை 

Published By: R. Kalaichelvan

07 Sep, 2019 | 05:07 PM
image

(இரா.செல்வராஜா)

கொழும்பு நகரிலும் , நகரை அண்டியப் பகுதிகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏற்படும் வாகன நெரிசல்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து பொலிஸ் திணைக்களமும் , போக்குவரத்து அமைச்சும் கவனம் செலுத்தி வருகின்றது.

 

குறிப்பாக காலை வேளையில் ஏற்படும் வாகன நெரிசலின் காரணமாக பாடசாலைக்குச் செல்லூம் மாணவர்களும் அலுவலக ஊழியர்களும் உரிய நேரத்தில் சமூகமளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மாலை வேளையில் கடமையை முடித்து விட்டு வீடு செல்லும் ஊழியர்கள் வாகன நெரிசல் காரணமாக பல மணித்தியால தாமதத்தின் பின்னரே வீடுகளுக்கு செல்ல முடிவதாக சுட்டிக்காட்ட படுகின்றது. இது குறித்த பெரும் எண்ணிக்கையிலான முறைப்பாடுகளும் ஆலோசனைகளும் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்து வருகின்றன.

பெரும்பாலும் கொள்கலன்கள் காலை மாலை வேளைகலில் அதிகளவில் பயணிப்பதால் பெரும் வாகன நெரிசல் ஏற்படுவதாக , அந்த பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்துள்ள ஆலோசனைகளிலும் முறைப்பாடுகளிலும் தெரியவந்துள்ளது.

1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாலை 6 மணிமுதல் காலை 6 மணி வரையே கொள்கலன்கள் பயணிக்க முடியும் என்ற கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது 40 அடி மற்றும் 20 அடி நீளமன கொள்கலன்கள் காலையிலும் மாலையிலும் அதிகமாக பயணிப்பதால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. 

இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்த காலை 6.30 மணிமுதல்  8.30 மணி வரையும் , மாலை 4.30 மணிமுதல் 8 மணிவரையும் கொள்கலன்கள் பயணிப்பதை தடைசெய்ய வேண்டும் என பொலிஸ் தலைமையகத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள ஆலோசனைகளில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பாக பொலிஸ் தலைமையக உயர் அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டப்போது , இவ்வாறான மாற்றங்கள் அரச மட்டத்திலேயே எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59