(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பலாலி விமான நிலைய முதற்கட்ட அபிவிருத்திக்காக ஏற்கனவே பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் மாற்றத்திற்கு பொது மக்களின் காணிகள் மேலும் சுவீகரிக்கப்படுமா என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று 27/2 இன் கீழ் சிறப்புக் கேள்வி ஒன்றினை எழுப்புகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் 349 ஏக்கர் பொது மக்களின் காணிகள் 1950 – 1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிகரிக்கப்பட்டதாகவும், 716 பேர் இக்காணிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ள நிலையில், அவர்களில் 215 பேருக்கு மட்டுமே இழப்பீடுகள் கிடைத்துள்ளதாகவும், மேற்படி காணி உரிமையாளர்களில் பலர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில், அவர்களின் உரித்தானவர்கள் உரிய உறுதிப்படுத்தல்கள் இன்மையால் குறிப்பிட்ட இழப்பீடுகளைப் பெற இயலாத நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பலாலி விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கென 1984ஆம் ஆண்டு 397 உரிமையாளர்களது 64 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டதாகவும், இவர்களுக்கான இழப்பீடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை எனவும் அறியக் கிடைத்துள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM