(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கம் கட்சி உறுப்பினர்கள் எவருக்கும் கிடையாது எனத் தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரது ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கப் பெறும் என்றும் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ அறிவிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தி போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க ஏற்பாடு செய்த பேரணி இன்று குருநாகலை நகரில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2020 ஆம் ஆண்டு சாதாரண மக்களை மையப்படுத்திய அரசாங்கமே அமைக்கப்படும். அரசியல் அதிகாரம் ஒரு குடும்பத்திற்கு மாத்திரம் உரித்துடையது என்று எவரும் உரிமை பத்திரம் எழுதிக் கொடுக்கவில்லை. குடும்ப ஆட்சியை மீண்டும் உருவாக்கி பலவீனமடைந்துள்ள அரசியல் நிலையினை பலப்படுத்தவே ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றார்கள். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM