இத்தாலியைச் சேர்ந்த 116 வயதான எம்மா மொரானோ உலகின் மிகவும் வயதான நபர் என்ற பெயரைப் பெறுகிறார்.
உலகின் மிகவும் வயதான நபராக இதுவரை காலமும் விளங்கிய அமெரிக்காவைச் சேர்ந்த 116 வயதான சுஸன்னாஹ் முஷட் ஜோன்ஸ் கடந்த வியாழக்கிழமை மரணமானதையடுத்து அவரது இடத்தை எம்மா மொரானோ பெற்றுள்ளார்.
1899 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி 8 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்தவராக பிறந்த அவர், தனது இளைய சகோதர, சகோதரிகள் அனைவரை விடவும் அதிக காலம் உயிர் வாழ்ந்துள்ளார்.
அவரது கடைசி சகோதரி 5 வருடங்களுக்கு முன்னர் தனது 102 ஆவது வயதில் மரணமடைந்திருந்தார்.
2020 ஆம் ஆண்டு வரை வாழ்ந்து உலகில் அதிக காலம் உயிர் வாழ்ந்தவர் என்ற சாதனையைப் படைப்பதே தனது அடுத்த கட்ட இலட்சியம் என எம்மா தெரிவிக்கிறார்.
உலகில் இதுவரை அதிக காலம் வாழ்ந்த மனிதராக 1997 ஆம் ஆண்டில் தனது 122 ஆவது வயதில் மரணமான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் கால்மென்ட் விளங்குகிறார்.
நடக்கவோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கவோ முடியாத நிலையிலுள்ள எம்மா, கடந்த 25 வருட காலமாக தனது மாடிக் குடியிருப்பு வீட்டை விட்டு வெளியில் செல்லாது உள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM