தமிழகத்தின் 15-ஆவது சட்ட சபைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடை பெறுகின்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 233 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் விநியோகிக்கப்படுவதாக வந்த முறைப்பாடு காரணமாக அந்த தொகுதி தேர்தல் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அங்கு எதிர்வரும் 23ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், 25 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடை பெறும் எனவும் தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
இதனால் அரவக்குறிச்சி தவிர மற்ற 233 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை மொத்தம் 11 மணி நேரம் இடை விடாது நடைபெறும்.
மொத்தம் 5 கோடியே 82 இலட்சம் வாக்காளர்கள் வாக்களித்து தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை இத் தேர்தலில் பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 66 ஆயிரத்து 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச் சாவடிகளுக்கு நேற்று காலை முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் வாக்குப் பதிவுக்கு தேவையான 43 வகையான பொருட்களும், பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றன.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மொத்தம் 3776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர்கள் மட்டும் 23ஆம் திகதி தேர்தலை சந்திக்கிறார்கள்.
தேர்தல் பணியில் மொத்தம் 4 இலட்சத்து 70 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 1 இலட்சத்து 40 ஆயிரம் இயந்திரங்கள் பயன் படுத்தப்படுகின்றன.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு கண்காணிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு காணொளிலும்(வீடியோவிலும்) பதிவு செய்யப்படுகிறது.
முதியோர் மற்றும் ஊன முற்றோர் வாக்குப்பதிவு செய்வதற்காக வாக்குச் சாவடிகளுக்கு செல்ல சக்கர நாற்காலிகள்(வீல் சேர்கள்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எந்தெந்த வாக்குச் சாவடிக்குட்பட்ட பகுதிகளில் முதியோர், ஊனமுற்றோர் எவ்வளவு பேர் உள்ளனர், அங்கு எத்தனை சக்கர நாற்காலிகள் (வீல் சேர்கள் ) தேவை என்பதும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க தமிழ்நாடு முழுவதும் 11 ஆயிரம் சக்கர நாற்காலிகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு மற்றும் வாக்குப்பதிவு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 164 பொதுப்பார்வையாளர்களும், 122 செலவினப் பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறவும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குப் பதிவு செய்யவும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 300 கம்பெனியைச் சேர்ந்த 18 ஆயிரம் துணை இராணுவப் படையினர் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஏற்கனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சென்று பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.
சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் உள்ள 58 ஆயிரத்து 468 வாக்குச் சாவடிகளில் 3,653 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 3,773 வாக்குச் சாவடிகளில் 433 மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு துணை இராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 65 ஆயிரம் பொலிஸாரும், 18 ஆயிரம் துணை இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுவது தவிர முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற வீரர்கள், ஊர்காவல் படையினர் அதிரடிப்படையினர் என மொத்தம் 1 இலட்சத்து 38 பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
சென்னையில் உள்ள 16 தொகுதியில் 7,500 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மொத்தம் 40 இலட்சம் வாக்காளர்கள் ஓட்டுப் போடுகிறார்கள். இதில் பதட்டமான 433 மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் மாநில சட்ட ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு மேற்பார்வையிலும், சென்னையில் பொலிஸ் கமிஷனர் அசுதோஷ் சுக்லா தலைமையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிடவும், பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் வெளிமாநிலங்களில் இருந்து 31 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தமிழகம் வந்துள்ளனர்.
தேர்தலை அமைதியாகவும் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி நடத்தவும் தேர்தல் ஆணையகமும் , பொலிஸாரும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
இன்று மாலை வாக்குப்பதிவுகள் முடிவடைந்ததும் மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். பின் 19ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM