அரசியல் பிரச்சினைக்கு மக்களே முறையான தீர்மானத்தை எடுக்க வேண்டும் -ஜனாதிபதி 

Published By: Vishnu

04 Sep, 2019 | 08:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடு எதிர்க் கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார  நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் நாட்டு மக்கள் அரசியல் ரீதியில்  முறையான தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும்.  எதிர்காலத்தில் ஏற்படகூடிய  நெருக்கடிகளை முன்கூட்டியே அறியும் அரசாங்க நிர்வாகமே காணப்படுகின்றது என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேன தெரிவித்தார்.

நடப்பு அரசாங்க நிலவரம் எதிர்கால சட்ட விவரணங்களை தெளிவுப்படுத்தும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர்  ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ  ராஜபக்ஷ எழுதிய நூல் வெளியிட்டு விழா இன்று பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.  

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் நடப்பு அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் எதிர்கால சட்ட செயற்பாடுகள் தொடர்பில்  மக்களுக்கு தெளிவுப்படுத்தும் விதமாக  நூல் வெளியிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.  இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்  நடைமுறையில் இடம் பெறுகின்றது.

ஜனாதிபதி சட்டத்தரணி என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு எதிர்கால சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளமை நிச்சயம் நடந்தேறும்.  நாடு இன்று அரசியல் மற்றும்  பல சமூக பிரச்சினைகளை எதிர்க் கொண்டுள்ளது.

அரசியல் ரீதியில் பல மர்றுப்பட்ட கருத்துக்களும்  சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது.அரசியல் ரீதியில் நாட்டு மக்கள் சிறந்த தீர்மானத்தை விரைவாகவும், முறையாகவும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47