திருக்கோவில் அக்கரைப்பற்று பிரதான வீதியின் தம்பட்டை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டுவிலகி தடம்புரண்டு மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை (04) காலை இடம்பெற்றதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்
தம்பிலுவில் முதலம் பிரிவு ஜே.பி. வீதியைச் சேர்ந்த 8 வயதுடைய சதீஸ்குமார் சஞ்சேயன் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்திலுள்ள தமது வீட்டிலிருந்து சம்பவதினமான இன்று காலை சிறுவனின் மாமானார் முச்சக்கரவண்டி ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் சிறுவனின் தாயார் அம்மம்மா ஆகியோரை எற்றிக் கொண்டு அக்கரைப்பற்று பிரதேசத்தில் திருமணவீடு ஒன்றிற்கு சென்று பின்னர் அங்கிருந்து வீடு நோக்கி பயணித்துள்ளனர்.
இதன்போது அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதான வீதியின் தம்பட்டை பிள்ளையார் ஆலையத்துக்கு அருகிலுள்ள வீதி வளைவில் முச்சக்கரவண்டி வேககட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம்புரண்டு மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளனதில் சிறுவன் உயிரிழந்துள்ளார் .
இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM