(செ.தேன்மொழி)
கொச்சிக்கடை மற்றும் பிளியந்தலை பகுதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவர்களை கைது செய்வதற்காக பொதுமக்களிடம் உதவிக்கோரியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலுவகொட்டுவ பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் 4 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 3 'வெல்டின் ப்லான்ட் ' உபகரணங்களும் , பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த 3 தொலைக்காட்சிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
சந்தேக நபரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் சி.சி.ரி.வி காணொளி காட்சிகளினூடாக விசாரணைகளை முன்னெடுத்துவந்துள்ளனர். இதன் போது சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் , குறித்த நபரை கைது செய்வதற்காக பொது மக்களின் உதவியை எதிர்பார்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் 071-8591631 , 071-3772323 என்ற இலக்கங்களை தொடர்பு கொண்டு தகவலை வழங்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதேவேளை பிளியந்தலை பகுதியில் வீடொன்றில் தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபரை கைது செய்யவும் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
கடந்த மாதம் 21 ஆம் திகதி குறித்த வீட்டில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவரே இவ்வாறு வீட்டில் தங்கநகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
அப்கோட் - ஸ்றேனைஷ் தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தேடப்பட்டு வருவதுடன் , இவர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் 071-8591665 , 078-4600219 என்ற இலக்கதை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM