தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!

Published By: Vishnu

04 Sep, 2019 | 02:37 PM
image

(செ.தேன்மொழி)

பேலியகொட பகுதியில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்த பகுதியில் நேற்று பிற்பகல் பேலியகொட மேல்மாகாண வடக்கு குற்றப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

சந்தேக நபர் வத்தளை பகுதிகளில் இடம்பெற்றுள்ள பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பேலியகொட - துட்டுகெமுனு மாவத்தையைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 4 தொலைக்காட்சி பெட்டிகள் , 2 மடிக்கணணிகள் மற்றும் 2 தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து சந்தேக நபர் வத்தளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31