அமெரிக்காவுடன் எந்தவொரு பரஸ்பர பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடப்போவதில்லை எனவும் கொள்கை அடிப்படையில் இஸ்லாமிய குடியரசு அத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கு எதிர்ப்பைக் கொண்டுள்ளது எனவும் ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரோஹானி வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தற்போது அணுசக்தி உடன்படிக்கையில் தொடர்ந்துள்ள ஏனைய நாடுகளுடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் நாளை வியாழக்கிழமைக்குள் எதுவித பெறுபேற்றையும் தராவிட்டால் முக்கியத்துவமிக்க 2015 ஆம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கையின் கீழ் அளிக்கப்பட்ட உறுதிப்பாடுகள் தொடர்பில் மேலும் குறைப்பை மேற்கொள்ள ஈரான் தயாராகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2015ஆம் அணுசக்தி உடன்படிக்கையில் அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளுடன் ஜேர்மனியும் கைச்சாத்திட்டிருந்தது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து தனது நாட்டை கடந்த வருடம் மே மாதம் ஒருதலைப்பட்சமாக வாபஸ் பெற்று ஈரானுக்கு எதிராக தடைகளை மீள விதித்தது முதற்கொண்டு இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றநிலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த இரு நாடுகளுக்குமிடையிலான பதற்ற நிலையைத் தணிவிக்கும் முகமாக ரோஹானிக்கும் டொனால்ட் ட்ரம்பிற்குமிடையிலான சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்வது தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இடம்பெற்ற ஜி–7 உச்சிமாநாட்டின் போது நம்பிக்கையை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ரோஹானி நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், "இது தொடர்பில் தவறான புரிந்துணர்வு இருக்கலாம். நாம் பல தடவைகள் திரும்பத் திரும்ப கூறி வருவது என்னவென்றால் அமெரிக்காவுடன் பரஸ்பர பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான திட்டம் எதுவும் ஈரானுக்கு கிடையாது என்பதேயாகும்" என்று தெரிவித்தார்.
"ஆனால் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தையும் நீக்குமானால் கடந்த காலங்களில் இடம்பெற்றதைப் போன்று அணுசக்தி உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் நாடுகளுடனான சந்திப்பின்போது பேச்சுவார்த்தைகளை நடத்துவது சாத்தியமாகும்" என அவர் கூறினார்.
"எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் பேச்சுவார்த்தைகளில் உரிய பெறுபேறுகள் கிடைக்காவிட்டால் அணுசக்தி உடன்படிக்கையின் கீழான உறுதிப்பாடுகளைக் குறைத்துக்கொள்ளும் மூன்றாவது கட்ட நடவடிக்கை குறித்து நாம் அறிவிப்போம்" என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM