(இராஜதுறை ஹஷான்)
சுதந்திர கட்சி இன்று சகல சவால்களை தாண்டி வந்துள்ளது.எனவே இன்றிலிருந்து சுதந்திர கட்சி வெற்றி பாதையிலேயே செல்லும்.
இலங்கையை இரு தாசாப்தங்களுக்கும் அதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் ஆட்சி செய்ததைப் போன்றும், எதிர்வரும் காலங்களிலும் சுதந்திர கட்சியின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது ஆண்டு நிறைவு மாநாடு இன்று கொழும்பு - சுககதாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அண்மையில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தது. கட்சியை ஸ்தாபித்த பண்டாரநாயக்க இது போன்ற சவால்களுக்கு முகங்கொடுத்து இறுதியில் உயிரிழந்தார்.
அதே போன்று அதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாகப் பிளவடைந்து கட்சி தலைமையகம் கூட எம் கைவசம் இருக்கவில்லை. ஆனால் இன்று அவை அனைத்திற்கும் வெற்றிகரமாக முகங்கொடுத்து பலமான ஒரு கட்சியாக உருவாகியுள்ளது என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என அவர் குறித்த மாநாட்டில் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM