போரா சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள 21 ஆயிரம் பேர் வருகை

Published By: Vishnu

03 Sep, 2019 | 02:44 PM
image

(நா.தினுஷா)

இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரா சமூகத்தின் அஹூரா முபாரக் மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக இதுவரையில் 21 ஆயிரம் போரா சமூகத்தார் வருகை தந்துள்ளார்கள். 

இன்னும் 30 ஆயிரம் பேர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் இந்த மகாநாட்டினூடாக  51 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இலங்கையால் பெற்றுக்கொள்ள முடியும்  என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் இதனை குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சமிந்த கமகே மேற்கண்டவாறு கூறினார்.

ஏனைய நாடுகளுடன் சிறந்த நட்புறவை பேணினால் மாத்திரமே எமது பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.  அவ்வாறு இல்லாவிட்டால் அதன் விளைவுகளை நாங்களே சந்திக்க வேண்டி ஏற்படும். குண்டுத் தாக்குதல் சம்பவங்களை அடுத்து போரா  மாநாட்டை இலங்கையில் நடத்த தீர்மானித்துள்ளமை எமது நாட்டுக்கு கிடைத்த  சிறந்த வாய்ப்பாகும். இதனூடாக இலங்கைக்கு முக்கிய செய்தியை அறிவிக்க கூடியதாக உள்ளது. இங்கு முஸ்லிம் மக்களுக்கு எதிரான  செயற்பாடுகள் எதுவும் இல்லை  என்பதை  சர்வதேசத்துக்கு தெரியப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த மகாநாடு எமக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.  

எனவ‍ே வருகை தந்துள்ள போராக்களுக்கு தேவையான பாதுகாப்பை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.  அதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாநாடு நிறைவடைய இவர்கள் நாடு பூராகவும் சுற்றுலா பயணத்துக்காக செல்லவுள்ளார்கள். அதற்கு தேவையான  வசதிகளும் மேற்கொள்ளப்பட்டளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:11:31
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59