இந்தியா, மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவன் குடும்பத்தினர் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வந்ததால், இரண்டு குழந்தைகளுடன் தாயொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியா, மாகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 28 வயதான சீதா என்பவர், கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு, லக்ஷ் (4), ருத்ரா (5) என்கிற இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்ததிலிருந்தே தம்பதியினருக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், அவரை கடுமையாக தாக்கி கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்தி வந்துள்ளனர்.
இதனால் சீதா அடிக்கடி கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துவிடுவார். இந் நிலையில் தாய் வீட்டில் தங்கியிருந்த சீதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது இரண்டு குழந்தைகளையும் மின் விசிறியில் மாட்டி தூக்கிலிட்டு கொலை செய்துள்ளார்.
அவர்கள் இருவரும் இறந்த பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சீதாவின் சகோதரர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூன்று பேரில் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அங்கு மேற்கொண்ட சோதனையின் போது, குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம் என்னுடைய கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் என எழுதிவைக்கப்பட்டிருந்த கடிதத்தை கைப்பற்றினர்.
இந்த நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளதுடுன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM