இரு ஆண் பிள்ளைகளையும் தூக்கிட்டு கொன்று, தாயும் தற்கொலை: கணவர் வீட்டாரின் எல்லை மீறிய தொல்லையென கடிதத்தில் சாட்சியம்

Published By: J.G.Stephan

03 Sep, 2019 | 02:11 PM
image

இந்தியா, மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவன் குடும்பத்தினர் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வந்ததால், இரண்டு குழந்தைகளுடன் தாயொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள  சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்தியா, மாகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 28 வயதான சீதா என்பவர்,  கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு, லக்ஷ் (4), ருத்ரா (5) என்கிற இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்ததிலிருந்தே தம்பதியினருக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், அவரை கடுமையாக தாக்கி கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதனால் சீதா அடிக்கடி கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துவிடுவார். இந் நிலையில் தாய் வீட்டில் தங்கியிருந்த சீதா,  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது இரண்டு குழந்தைகளையும் மின் விசிறியில் மாட்டி தூக்கிலிட்டு கொலை செய்துள்ளார்.

அவர்கள் இருவரும் இறந்த பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சீதாவின் சகோதரர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூன்று பேரில் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அங்கு மேற்கொண்ட சோதனையின் போது, குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம் என்னுடைய கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் என எழுதிவைக்கப்பட்டிருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

இந்த நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளதுடுன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10