பிலிப்பைன்ஸில் சிறிய ரக விமானம் உல்லாச விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 9 பேரும் உடல் கருகி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ்- தெற்கு பகுதியில் சம்பொவாங்கோ டெல் நோர்டே மாகாணத்தில் உள்ள திபோலாக் நகரில் இருந்து நேற்று முன்தினம் சிறிய ரக வைத்திய மீட்பு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஒரு நோயாளி மற்றும் அவரது மனைவி, வைத்தியர், 2 தாதியர்கள் மற்றும் 2 விமானிகள் உட்பட 9 பேர் இருந்தனர்.
குறித்த விமானம் லாகுனா மாகாணத்தில் உள்ள பான்சோல் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறை உடனான தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து, விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டு, தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அப்போது விமானம் அங்குள்ள உல்லாச விடுதி மீது விழுந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததாக சர்வதேச ஊடகங்கள் தவலைவெளியிட்டுள்ளது.
குறித்த விபத்தில் விமானத்தில் இருந்த 9 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். கரிக்கட்டைகளான நிலையில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதி விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM