தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மாமானங்கள் எதிர்பார்ப்பு மிக்கவையாக இருக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது போன்று கடந்த காலங்களில் நாம் எடுத்த தவறான தீர்மானங்களால் தான் அண்மையில் பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. எனவே இனி எடுக்கும் தீர்மானங்கள் அவ்வாறல்லாமல் தீர்க்கமானவையாக இருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
சுதந்திர கட்சிக்கு ஆட்சியமைக்கக் கூடிய அதிகாரம் இல்லாவிட்டாலும் ஆட்சியாளரைத் தெரிவு செய்யக் கூடிய பலம் இருக்கிறது. அத்தோடு ஜனாதிபதி தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றமையால் எமது முடிவு எதிர்பார்ப்பானதாகவும் மிகுந்த முக்கியத்துவமுடையதாகவும் அமைந்துள்ளது. ஒருபோதும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்று தெரிந்தும் ஜே.வி.பி தனித்து போட்டியிடத் தீர்மானித்தது. இந்நிலையில் நாமும் தீர்க்கமானதொரு முடிவை எடுக்கவேண்டிய இடத்தில் இருக்கின்றோம்.
எந்த சந்தர்ப்பத்திலும் எல்லோரும் நினைப்பவை நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே பொதுஜன பெரமுன - சுதந்திர கட்சி கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பும் முறையான விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும். எனினும் அந்த விட்டுக் கொடுப்புக்கள் சுதந்திர கட்சியின் தனித்துவ தன்மையை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது.
நாம் இனியொரு போதும் ரணில், சஜித், கரு மாத்திரம் அல்ல ஐக்கிய தேசிய கட்சியில் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை. அதற்கான தேவையும் எமக்குக் கிடையாது. மாறாக சுதந்திர கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கும் தீர்மானத்தையே நாம் எடுப்போம். அதனை இறுதி நேரத்தில் அறிவிப்போம்.
பொதுஜன பெரமுனவின் போஷகர் பசில் ராபக்ஷ அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அந்த கட்சிக்கு சுதந்திர கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது என்பதை ஏற்றுக் கொண்டார். அதே போன்று எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் இதன் முக்கியத்துவத்தை அறிந்திருப்பார் என்று எதிர்பார்க்கின்றோம்.
எனவே இறுதி வரையில் பொதுஜன பெரமுனவுடனான கூட்டணியை வெற்றியடையச் செய்யும் வகையிலேயே பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம். அதே வேளை கட்சியின் தனித்துவத் தன்மையை காட்டிக் கொடுத்து அதனை முன்னெடுக்க மாட்டோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM