மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடை மழை பெய்து வருகின்றது. இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 48 மணிநேரத்தில் 114.7 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை காரணைமாக பல வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அன்றாட தொழிலில் ஈடுபபடுவோர் தொழிலின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புதிய காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, நாவற்குடா உட்பட பல இடங்களில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இன்றைய தினம் நடைபெறவிருந்த பல பொது நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. தனியார் வகுப்புக்களும் நடைபெறவில்லை.
தொடர்ந்தும் மழை பெய்வதால் பிரதான வீதிகளில் இருள் மயமாக காட்சி தென்படுகிறது. கடுமையான காற்றும் வீசிவருகின்றது. இதனால் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
- ஜவ்பர்கான்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM