மன்னார் தள்ளாடியிலுள்ள 54 ஆவது படைப் பிரிவு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை மாலை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குப்பட்ட வில்பத்து மற்றும் அதனை அண்டிய காட்டுப் பகுதிகளில் மரங்கள் நடும் நிகழ்வு இடம் பெற்றது.
வில்பத்து வனப்பகுதிகளில் சுமார் 2100 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஈடு செய்யும் வகையில் குறித்த பகுதியில் மரங்களை நாட்டி வைக்கும் திட்டம் குறித்து இராணுவ படைத்தளத்தின் பிரிகேடியர் இந்திரஜித் பண்டார தலைமையில் இராணுவத்தினர் இணைந்து வில்பத்தை அண்டிய கல்லாறு வனப்பகுதியில் மரங்களை வைபவ ரீதியாக நாட்டி வைத்தனர்.
'தேசிய வியத் பவறே' நிறுவனத்தின் அனுசரணையுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், மதத்தலைவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM