அமுலில் மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் கீழோ (புதிய முறை) அல்லது முன்னர் அமுலில் இருந்த சட்டத்தின் கீழோ (பழைய முறைமை) மாகாண சபை தேர்தல்களை நடத்த முடியாது என உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது உத்தியோகபூர்வ ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக தாமதமடைந்து வரும் காரணத்தினால் அரசியலமைப்பு சட்டத்தினூடாக உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் வாக்குரிமை மீறப்பட்டுள்ளது.
அதன் காரணத்தினால் துரிதமாக மாகாண சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
2017, 17 ஆம் இலக்க சட்டத்திற்கமைய ஜனாதிபதியினால் இலங்கை மக்கள் சமூகத்தின் பன்முகத்தன்மை, தொழில் மற்றும் சமூக பன்முகத்தன்மைகள் உள்ளடங்கும் வகையில் ஐவர் கொண்ட எல்லை நிர்ணயக் குழுவொன்றை 2017 ஒக்டோபர் மாதம் நியமித்தார்.
அந்தக் குழுவினால் சட்டமூலத்தின் சரத்துகளுக்கமைய மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போதும் அதற்கான பாராளுமன்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
அதன் காரணத்தினால் சட்டத்திற்கமைய சபாநாயகரால் 2018.08.28 ஆம் திகதி பிரதமர் தலைமையில் மீளாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், அக்குழுவினால் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர் அந்த அறிக்கையை ஜனாதிபதி சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.
மேற்குறிப்பிட்ட மீளாய்வுக் குழு அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் ஜனாதிபதியினால் அறிக்கையொன்றினூடாக உடன் அமுலுக்கு வரும் வகையில் தேர்தல் பிரிவுகளின் புதிய இலக்கங்கள், எல்லை மற்றும் மீளாய்வு குழு அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட தேர்தல் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெயர்களை பிரகடனப்படுத்தியதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும்.
ஆனாலும் மீளாய்வுக் குழு தனது கடமையை சரிவர ஆற்றாததன் காரணத்தினால் ஆட்சிக் காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளில் தேர்தல் நடாத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமையினால் மக்களுக்கு தேர்தல் அதிகாரத்தை வழங்கும் நோக்கில் அமுலிலிருக்கும் சட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு உயர்நீதிமன்றத்தின் கருத்தை ஆலோசிப்பதற்கு ஜனாதிபதி முடிவு செய்தார்.
அதற்கமைய மீளாய்வுக்குழு அறிக்கையை ஜனாதிபதியிடம் சட்டபூர்வமாக சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் தற்போது எல்லை நிர்ணயக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு விசேட அறிக்கையை தேர்தல் பிரிவுகளின் இலக்கங்கள், எல்லை மற்றும் தேர்தல் பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பெயர்களை பிரகடனப்படுத்துவதன் ஊடாக மேற்குறிப்பிட்ட சட்டமூலத்தின் சரத்துகளுக்கமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்கள் மற்றும் குறித்த திருத்தச் சட்டத்தின் கீழ் தேர்தலை நடத்த முடியாவிட்டால் அந்த திருத்தத்திற்கு முன் அமுலிலிருந்த சட்டத்தின்கீழ் மாகாண சபைகளை
நடாத்தும் சாத்தியங்கள் தொடர்பில் அரசியல் அமைப்பின் 129 (1) சட்டத்தின் கீழ் உயர்நீதிமன்றத்தின் கருத்தே வினவப்பட்டது.
அதற்கமைய 2019.08.29 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் உயர்நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதிபதிக் குழாம் அவர்களது ஏகமனதான கருத்தாக, மீளாய்வுக் குழு அறிக்கையில்லாமல், திருத்தச்சட்டத்தின் சரத்துகளுக்கமைய ஜனாதிபதியினால் தேர்தலை நடாத்துவதற்கான எல்லை நிர்ணயக் குழுவால் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையின் எல்லை நிர்ணயங்களை பிரகடனப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதி அவர்கள் வசம் இல்லை என்றும் அதன் காரணத்தினால் மாகாண சபை (திருத்தம்) சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாதென்றும் அர்த்த விளக்க கட்டளைச் சட்டத்தின் சரத்துகளுக்கமைய குறித்த திருத்தச் சட்டத்திற்கு முன்னர் அமுலிலிருந்த சட்டத்தின் கீழும் தேர்தலை நடாத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM