இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் காணாமல்போன 14 வயதுடைய சிறுமியொருவரின் உடல் ஜலான் மாவட்டத்தின் அதா என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் மாலை வேலையாகச் சென்ற இந்தச் சிறுமி அதன் பிறகு வீடு திரும்பாத நிலையிலேயே அவர் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
சிறுமி காணாமல் போன தினம் அன்றே பெற்றோர் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று பலக் அவரது ஆடைகள் கிழிந்த நிலையில் கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட கொடூரமான நிலையில் அவரது சடலம் ஜலான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், சந்தேக நபர் தன்னை அடையாளம் காட்டி விடக்கூடாது என்பதற்காக கண்களைத் தோண்டி எடுத்திருக்கலாம் என்றும் சந்தேகித்துள்ளனர்.
எவ்வாறெனினும் பாலியல் பலாத்காரக் கொலையா என்பது பிரேதப் பரிசோதனை முடிவிலேயே தெரியவரும்.
சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியின் அயல் வீட்டுக்காரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் இவர் மீது பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM