முகத்திரை அணிந்து பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அசெளகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கால நேர சூழ்நிலைகளை கவனத்திற் கொண்டு புத்தி சாதூரியமாகவும், அவதானத்தோடும் நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அனைத்து முஸ்லிம் பெண்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையில் செயலாளர் அஷ்ஷைக் எச்.உமர்தீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் நாடைபெற்ற துன்பியல் நிகழ்வைத் தொடர்ந்து நாட்டில் அசாதார நிலை காணப்பட்டதுடன், அவசரகால சட்டமும் அமுல் செய்யப்பட்டது. அவசர கால சட்டத்தின்போது முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கான தற்காலிக தடையும் விதிக்கப்பட்டது.
எனினும் கடந்த 08.23 ஆம் திகதியுடன் அவசர கால சட்டம் நீக்கப்பட்டு பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் நாட்டு மக்களின் அச்சமும் மனோபாவமும் முழுமையாக மாறியதாக தெரியவில்லை.
இந் நிலையில் முஸ்லிம் சகோதரிகள் முகத்திரை அணிந்து வெளியேறும்போது பல்வேறு அசெளகரியங்களுக்கு ஆளாக இடமுண்டு. அத்துடன் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையில் இனவாத சக்திகளுக்கு இடமளிக்காமல் பார்த்துகு கொள்வது எமது பொறுப்பாகும்.
எனவே முகத்திரை அணிந்து பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அசெளகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கால நேர சூழ்நிலைகளை கவனத்திற் கொண்டு புத்தி சாதூரியமாகவும், அவதானத்தோடும் நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறது.
எஎமது அவதானமான செயற்பாடுகள் எமது உரிமைகளை உரிய முறையில் பாதுகாக்க நிச்சயம் உதவும் என்ற எதிர்பார்ப்பு ஜம்இய்யாவுக்கு இருக்கிறது.
இலங்கை முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் அனுபவித்து வந்த மதச் சுதந்திரமும், உரிமைகளும், கலாசாரமும் தொடர்ந்தும் பாதுகாக்க பட வேண்டும் என்பதே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM