ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகளின் சிறைச்சாலை மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இன்று மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன
ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகளின் சிறைச்சாலை மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்
ஏமன் நாட்டின் தலைநகரான சனா நகரின் அருகாமையில் உள்ள சில பகுதிகள் மற்றும் துறைமுக நகரமான ஏடனில் முக்கிய இடங்களை ஆக்கிரமித்துள்ள ஹவுத்தி போராளிகள் மற்றும் பல்வேறு புரட்சிப்படையினர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்டைநாடான சவுதி அரசின் உதவியுடன் புரட்சிப்படையினர் மீது ஏமன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஏமனில் ஹவுத்தி போராளிகளின் சிறைச்சாலை மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
அந்நாட்டின் தலைநகர் சனாவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாமர் என்ற பகுதியில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் வலிமையாக உள்ளது. இவர்களுடன் போரிட்டு பிடிபடும் அரசுப்படையினரை கைது செய்து அடைத்து வைப்பதற்காக இங்குள்ள பல்கலைக்கழக கட்டிடம் ஒன்றை சிறைச்சாலையாக ஹவுத்திகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சிறைச்சாலையை குறிவைத்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் 60-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் சுமார் 50 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என ஏமன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM