(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஐக்கிய தேசிய கட்சி தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகி இரண்டாம் நிலை தலைவர் ஒருவருக்கு வழங்கவேண்டும். இனி ஒருபோதும் கட்சியை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்கவினால் முடியாது என்பது கடந்த 25வருடங்களில் தேர்தல் தோல்விககளின் மூலம் உணர்ந்துகொள்ளலாம் என ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய குறிப்பிடுகையில்,
ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக இருந்து பல அபிவிருத்திகளை நாட்டுக்கு செய்திருக்கின்றார். கட்டுநாயக்க, பிரயகம முதலீட்டு வலயம் அவரால் மேற்கொள்ளப்பட்டதாகும். அந்த கெளரவத்தை பாதுகாத்துக்கொண்டு அவர் வீட்டுக்கு செல்ல காலம் வந்துள்ளது. அவரின் தலைமைத்துவத்தால் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றன.அதனால் அவர் தொடர்ந்தும் கட்சி தலைவராக இருப்பது பொருத்தம் இல்லை.
அத்துடன் இலகுவான நபராக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புரிந்துணர்வுடன் செல்ல முடியாமல் போயுள்ளது. இறுதியில் அரசாங்கத்தை கலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதனால் ரணில் விக்ரசிங்க தனக்கிருக்கும் கெளரவத்துடன் கட்சி தலைமைப்பதவியில் இருந்து விலகிக்கொண்டு இரண்டாம் நிலை தலைவர்களாக இருக்கும் சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, கரு ஜயசூரி, நவீன் திஸாநாயக்க போன்றவர்களுக்கு வாய்ப்பை வழங்கவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM