மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி செட்டிபாளையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்ததாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொறியும் கல்முனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கி சென்றுகொண்டிருந்த பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இம்மரணம் சம்வபவித்தது.
காவத்தைமுனை, பனிச்சையடி வீதியை அண்டி வசிக்கும் அலியார். நூர்ஜஹான் (வயது 46) எனும் பெயருடைய பட்டா ரக வாகனத்தில் பயணித்தவரே விபத்தில் சிக்கி மரணித்தவராகும். சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் பற்றி களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM