ஹொங்கொங்கில் பாராளுமன்றத்திற்கு வெளியே பெற்றோல் குண்டுகளை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹொங்கொங்கில் இன்று போராட்டம் நடத்தப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்ட அரசாங்க கட்டடங்களில் தடையை மீறி போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதில் ஹொங்கொங் பாராளுமன்றத்தின் வெளியே போராட்டக்காரர்கள் பெற்றோல் குண்டுகளை வீசியதாகவும், மேலும் பாராளுமன்றத்தைச் சுற்றியிருந்த தடுப்புகளை போராட்டக்காரர்கள் தகர்த்ததாகவும் ஹொங்கொங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாணவர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ளும் இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இதுவரை ஹாங்கொங் போராட்டக் கலவரங்களில் 800 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் ஹொங்கொங் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான சமூகச் செயற்பாட்டாளர் ஜோஷ்வா வாங் உள்ளிட்ட சிலரை பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM