அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தின் மேற்குப்பகுதியிலுள்ள ஒடெஸ்ஸா மற்றும் மிட்லாண்ட் ஆகிய பகுதிகளில் வாகனத்தை இயக்கிக்கொண்டே துப்பாக்கியை ஏந்திய ஒருவர், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. டெக்சாஸ் நேரப்படி நேற்று முற்பகலில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட ஒருவர் நிகழ்விடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், மேலும் பல சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இதுகுறித்து பேசிய டெக்சாஸ் மாகாண காவல்துறையின் செய்தித்தொடர்பாளர், இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தது மற்றும் குறைந்தது 21 பேர் காயமடைந்ததை உறுதி செய்தார். இதில் காவல்துறையினரும் அடக்கம் என்று அவர் மேலும் கூறினார்.
டெக்சாஸின் எல் பாசோ நகரில் துப்பாக்கித்தாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்த நிகழ்வு இடம்பெற்ற சரியாக நான்கு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM