மண்டபம் கடலில் தரை தட்டி நின்ற இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், மீனவர்களின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், இந்திய கடலோர காவல் படை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, கடல் ரோந்து பணிக்காக 5 ஹோவர் கிராஃப்ட் கப்பல்களும், 2 அதிவேக கப்பல்களும் உள்ளன. இதை தவிர 2 சிறிய ரக ரோந்து படகுகளும் உள்ளன. இந்த கப்பல்கள் மற்றும் படகுகள், பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சி-432 என்ற அதிவேக கப்பல் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ரோந்து பணிக்கு சென்று விட்டு மண்டபம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, கப்பல் வரும் பாதையில் வழக்கத்திற்கு மாறாக கடல் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆழம் குறைந்த அந்தப் பகுதியில் கப்பல் வந்தபோது, திடீரென தரை தட்டி நின்றது. கப்பலை அங்கிருந்து உடனடியாக நகர்த்துவதற்கு கடலோர காவல் படையினர் மேற்கொண்ட முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை.
இதையடுத்து, மண்டபத்தில் உள்ள மீனவர்களின் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு, கடலோர காவல் படைக்குச் சொந்தமான சிறிய ரக ரோந்து படகு போன்றவைகள் அங்கு கொண்டுசெல்லப்பட்டு, அவற்றின் உதவியுடன் சிக்கிய கப்பலில் கயிறு கட்டி இழுத்து பாதுகாப்பாக மீட்கப்பட்டது. தொடர்ந்து அந்தக் கப்பல், கடலோர காவல்படை நிலையத்தில் உள்ள கப்பல் நிறுத்தும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
தரை தட்டியதில் கப்பலுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனால், கடலோர காவல்படையினர் நிம்மதி அடைந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM