சுற்றுலா விடுதிகள் உள்ளிட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு.
சுற்றுலா சபையில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அண்மையில் அரசாங்கம் முன்னெடுத்த முடிவுகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீழ்ச்சியை சந்தித்த சுற்றுலாத்துறையை மீளகட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி விசேட உப செயற்குழுவொன்று நிறுவப்பட்டதன் பின்னர் பல்வேறு முடிவுகளை மேற்கொண்டுள்ளதுடன், அதன் நன்மைகள் இதுவரை சுற்றுலாத்துறையினருக்கு கிடைக்கப்பெறவில்லையென ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், நிதி அமைச்சு, சுற்றுலா சபை அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM