இலங்கைக்கு வருகை தந்துள்ள கெண்டபரி பேராயர் அதி வண. ஜஸ்டின் வெல்பி ஆண்டகை நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்ததுடன், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை பாராட்டினார்.
மிகுந்த மரியாதையுடன் பேராயரை வரவேற்ற ஜனாதிபதி, இலங்கை விஜயம் நாட்டுக்கு ஆசீர்வாதமாகுமென குறிப்பிட்டதோடு, அவரது வருகைக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் பேராயருடன் மிக நெருங்கிய சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், நாட்டின் அனைத்து மதத்தினரிடையேயும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை கட்டியெழுப்பி அனைத்து மதத்தினரின் வரப்பிரசாதங்களையும் உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை பாராட்டினார்.
சுமூக கலந்துரையாடலைத் தொடர்ந்து அதி வண. ஜஸ்டின் வெல்பி ஆண்டகை ஜனாதிபதி அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதுடன், இந்நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசில்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM