ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை இதுவரை காங்கிரஸ் வாங்கியதில்லை என்றும், பா.ஜ.க. வாங்கியது தவறான முன்னுதாரணம் என்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
“வெளி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர், முதலீடுகளுடன் வந்தால் பாராட்டுகிறோம். ஏற்கெனவே நடந்த முதலீட்டாளர்கள் ஒப்பந்தம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். பண வீக்கத்திற்கு காரணம் காங்கிரஸ் அல்ல. ரிசர்வ் வங்கியிடமிருந்து காங்கிரஸ் உபரி நிதியை இதுவரை வாங்கியதேயில்லை.
அதாவது ரிசர்வ் வங்கி அரசுக்கு தர வேண்டிய பங்கு தொகையை வாங்கி இருக்கிறார்களே ஒழிய, உபரி நிதியை இதுவரை வாங்கியதில்லை. பா.ஜ.க. தான் இதை முதன்முதலில் வாங்கியுள்ளது. உபரி நிதி எப்போது வாங்கப்படவேண்டும்? பஞ்சம் வந்தாலோ, யுத்தம் வந்தாலலோ வாங்கலாம். அரசின் அன்றாட செலவுகளுக்கு உபரி நிதியை வாங்கக்கூடாது. முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் திறமையானவர் என சி.பி.ஐ. கிண்டல் செய்வது நியாயமில்லை.” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM