இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஜமேக்காவில் பிற்பகல் 2:30 க்கு ஆரம்பமாகவுள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் ஒருநாள், இருபதுக்கு - 20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளைாயடி வருகிறது.
இதில் ஏற்கனவே இருபதுக்கு - 20 மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதேவேளை கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகி 26 ஆம் திகதி நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் இந்திய அணி 318 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றிருந்தது.
இந் நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியானது இன்று ஜமேக்காவில் இலங்கை நேரப்படி 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது டெஸ்ட் போட்டி போன்றே இந்த போட்டியிலும் இந்திய அணியினர் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் உள்ளனர்.
மறுபக்கம் செந்த மண்ணில் தொடர்ந்து தடுமாறி வரும் மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே அந்த அணியால் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இல்லாவிட்டால் பலவீனமே வெளிப்படும்.
மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் கடந்த 2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியை டெஸ்ட் அரங்கில இதுவரை வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM