(செ.தேன்மொழி)
தங்கொட்டுவ பகுதியில் தனியார் பஸ் முச்சக்கர வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு, இரு பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தங்கொட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கொட்டுவ - பன்னல பிரதான வீதியில் வைத்தியசாலைக்கு அருகில் இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
நீர்கொழும்பிலிருந்து கிரிவுள்ள பகுதிக்குச் சென்ற தனியார் பஸ், எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த பெண்ணொருவரும் தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஹந்துன்குட்டி ஆராச்சிகே ரஞ்சித் எனப்படும் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் வெல்பல்ல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய தோன குமுதுனி தம்மிக்கா ஜயகொடி என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தின் போது தனியார் பஸ்சில் சென்ற இரு பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்து தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பஸ் சாரதியை கைது செய்யதுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM