(ரொபட் அன்டனி)
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றிருக்கின்றது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, பொருளாளர் லசந்த அழகியவண்ண மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோர் கோத்தபாய ராஜபக்ஷவுடனான சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை சுதந்திரக்கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவருககுமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை என்பவற்றின் தொடர்ச்சியாகவே கோத்தாபயவுக்கும் சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், கொள்கைகள் தொடர்பில் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக அடுத்து அமைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்தல் முறைமை அபிவிருத்தி கொள்கை போன்ற முக்கியவிடயங்கள் குறித்து இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடனேயே இந்த சந்திப்பு சுதந்திரக்கட்சியின் பிரதிகள் கலந்து கொண்டிருந்தனர். கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் சுதந்திரக்கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையில் மேலும் சில பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM