பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தை கலைக்கும் பிர­த­மரின் தீர்­மா­னத்­திற்கு கடும் எதிர்ப்பு

Published By: Vishnu

30 Aug, 2019 | 10:46 AM
image

பிரித்­தா­னிய பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்தம் செய்­வ­தற்கு  எடுத்த தீர்­மானம்  குறித்து  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும்  பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்­கை­யின்றி வில­கு­வ­தற்கு எதிர்ப்பைக் கொண்­ட­வர்கள் ஆகியோர் கடும் சினத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

அத்­துடன் பிர­த­மரின் இந்­ந­ட­வ­டிக்­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து நாட­ளா­விய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள்  முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

மேலும் பிர­த­மரின் பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்­து­வ­தற்­கான  திட்­டத்­திற்கு எதி­ராக சட்ட ரீ­தி­யான  சவால் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­துடன்  ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மானோர் கையொப்­ப­மிட்டு முறைப்­பா­டொன்றை தாக்கல் செய்­துள்­ளனர்.

 எதிர்­வரும் செப்­டெம்பர் மாதத்­தி­லி­ருந்து  ஒக்­டோபர் மாதம் வரை­யான 5 வாரங்­க­ளுக்கு பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்தம் செய்­வது  பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வது சம்­பந்­த­மான பிறிக்ஸிட் செயற்­கி­ரமம் தொடர்பில்  விவா­தத்தை  நடத்­து­வ­தற்­கான நேரத்தை அனு­ம­திப்­ப­தாக உள்­ள­தாக  அர­சாங்கம் கூறு­கி­றது.

இந்த நட­வ­டிக்கை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்கை எது­வு­மின்றி வில­கு­வ­தற்கு முட்­டுக்­கட்டை போடு­வதை தடுத்து நிறுத்­த ஜன­நா­ய­கத்­திற்குப் புறம்­பாக முன்னெடுக்கப்பட்ட முயற்­சி­யென அதன் எதிர்ப்­பா­ளர்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.

பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்தம் செய்யும் மேற்­படி திட்­டத்­திற்கு எலி­ஸபெத் மகா­ரா­ணியார்  நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை அனு­ம­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும்  இது நிச்­ச­ய­மாக பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்­கை­யின்றி வெளியே­று­வ­தற்­கான எதிர்ப்­பிற்கு தடை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு அர­சியல் நகர்­வல்ல  எனவும் அமைச்சர் மைக்கேல் கொவ் தெரி­வித்தார்.

பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட தின­மான ஒக்­டோபர் 31ஆம் திக­திக்கு பெரு­ம­ளவு நேரம் உள்­ள­தாக அவர் கூறினார்.

பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை தெரி­விக்­கையில், பாரா­ளு­மன்றம் இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­ட­தற்கு பின்னர் எதிர்­வரும் ஒக்­டோபர் 14ஆம் திகதி மகா­ரா­ணி­யாரின்  உரை இடம்­பெ­ற­வுள்­ள­தாக குறிப்­பி­ட்டார். 

''இந்த நாட்டை முன்­னோக்கி கொண்டு செல்­வ­தற்­கான  திட்­டங்­களை முன்­னெ­டுக்க பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கி­ய­தற்கு பிற்­பாடு  வரை காத்­தி­ருக்க தான் விரும்­ப­வில்லை" என போரிஸ் ஜோன்ஸன் கூறினார்.

மகா­ரா­ணி­யா­ரு­ட­னான சந்­திப்பின் போது பங்­கேற்ற பாரா­ளு­மன்றத் தலைவர் ஜாகொப் றீஸ் மொக் கூறு­கையில், இந்தப் பாரா­ளு­மன்­றத்தின் கூட்டத் தொட­ரா­னது  கடந்த 400 வருட காலத்­தி­லேயே மிகவும் நீண்ட கூட்­டத்­தொடர் ஒன்­றாக விளங்­கு­வதால்  அதனை இடை­நி­றுத்தி புதிய கூட்­டத்­தொடர் ஒன்றை ஆரம்­பிக்க உரிமை உள்­ளது என்று  தெரி­வித்தார்.

அதே­ச­மயம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரமப், போரிஸ் ஜோன்­ஸ­னுக்கு தனது ஆத­ரவைத் தெரி­வித்­துள்ளார். இந்­நி­லையில்  பாரா­ளு­மன்றம் இடை­நி­றுத்தம் செய்­யப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து  பாரா­ளு­மன்­றத்­திற்கு முன்­பாக ஆரம்­பித்த ஆர்ப்­பாட்ட ஊர்­வ­ல­மொன்று பின்னர்  டவுணிங் வீதி­யி­லுள்ள பிர­த­மரின் அலு­வ­லகம்வரை  விரி­வாக்கம் அடைந்­த­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இந்த ஆர்ப்­பாட்ட ஊர்­வலம் வெறும் ஆரம்பம் மட்­டுமே எனவும்  வார இறு­தியில் மேலும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள்  இடம்­பெ­ற­வுள்­ளன எனவும்  ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் கூறு­கின்­றனர்.

அத்­துடன்  ஒரு நாளிலும் குறைந்த காலப்பகு­தியில் ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மானோர் கையொப்­ப­மிட்டு  அர­சாங்க இணை­யத்­த­ளத்தில் முறைப்பாடொன்றை தாக்கல் செய்­துள்­ளனர்.

பிரித்­தா­னிய  பாரா­ளு­மன்றம்  எதிர்­வரும் செப்­டெம்பர் 9ஆம் திக­திக்கும் 12 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட தின­மொன்­றி­லி­ருந்து  எதிர்­வரும் ஒக்­டோபர் 14 ஆம் திகதிவரை இடை நிறுத்தம் செய்யப்பட வுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17