24 மணித்தியாலங்களுக்குள் ஐவரின் உயிரை காவு வாங்கிய வீதி விபத்துக்கள்: மேலும் 9 பேர் வைத்தியசாலையில்...

Published By: J.G.Stephan

29 Aug, 2019 | 04:38 PM
image

(செ.தேன்மொழி)

நாட்டின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை(29.08.2019) இடம்பெற்ற வாகன விபத்துகளில் பெண்ணொருவர் உட்பட 5  பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர்.

கல்முணை , மாரவில ,மொணராகலை மற்றும் வீரகெடிய  ஆகிய பகுதிகளில் கடந்த நேற்று புதன்கிழமை(28.08.2019) தொடக்கம் இன்று மதியம் வரை இடம்பெற்ற வாகன விபத்துகளிலே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில், கல்முணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனகுடியிருப்பு பகுதியின் நேற்றிரவு, இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியதில், படுகாயமடைந்த நிலையில் கல்முணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்தன் பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள், 19 வயதுடைய அருளானந்தன் ஹரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 30 வயதுடைய கணேசன் தனுசியன் என தெரியவந்துள்ளது. 

அதேவேளை, மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில பகுதியில் நேற்று மாலை 4 .20 மணியளவில் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து மீன்சார தூணுடன் மோதி விபத்துக்குள்ளானதில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். 

மற்றுமொரு விபத்தாக, மொணராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரகல மாளிகை வீதியில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் சாரதி உற்பட 10 பேர் பயணித்த கெப் வாகனம் வழுக்கிச் சென்று பள்ளத்தில் வீழ்ந்து இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்து சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட 4 பெண்கள் உள்ளிட்ட 8 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய 7 பேரும் சிகிச்சைப் பெற்று வருகிவதாகவும், வீரகெடிய வீதியில் நேற்று முற்பகல் 10 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாதைசாரி பெண்ணெருவர் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பெண் தங்கல்லை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும், இந்த விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08