எதிர்வரும் பத்தாம் திகதி சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு இலங்கையின் சுமித்திரயோ நிறுவனம் கட்டுரை போட்டியொன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
தற்கொலைகளை தடுப்பதற்காக இணைந்து பணியாற்றுதல் என்ற கருப்பொருளின் கீழ் சிறுகதைகள் கவிதைகள் உட்பட படைப்புகளை சுமித்திரயோ நிறுவனம் எதிர்பார்க்கின்றது.
ஆக்கங்களை அனுப்ப விரும்புவோர் 60 பி ஹோர்ட்டன் பிளேஸ் கொழும்பு -07 என்ற முகவரிக்கோ அல்லது சுமித்திரயோவின் sumithra@sumithrayo.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்கலாம் மேலும் படைப்புகளை சுமித்திரயோவின் www.sumithrayo.org என்ற இணையத்தளத்திலும் பதிவேற்றலாம்.
படைப்புகள் 300 சொற்களிற்கு உட்பட்டதாக காணப்படவேண்டும், மும்மொழிகளிலும் படைப்புகளை அனுப்பலாம் என சுமித்திரயோ தெரிவித்துள்ளது.
படைப்புகளை ஆகஸ்ட் ஆம் 31 ஆம் திகதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ள சுமித்திரயோ நிறுவனம் படைப்பாளிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் முதல் மூவரிற்கு விசேட பரிசில்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM