வவுனியா கோவில்புதுக்குளம் பகுதியில் குளக்கரைக்கு அண்மித்த பகுதியில் வெடிபொருட்களை வவுனியா பொலிசார் இன்றைய தினம் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
கடந்த ஒரு வாரமாக வவுனியா தட்சணாங்குளம் கோவில்புதுக்குளம் பகுதியில் உள்ள குளக்கட்டு வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இன்று அப்பகுதிக்கு பெகோ வாகனத்தை கொண்டு சென்றபோது குழி ஒன்று காணப்பட்டுள்ளது. அக் குழியை மூடிக்கொண்டிருக்கும் போது
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்ததையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
பொலிசாருக்கு தெரியபடுத்தபட்ட பின் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் குறித்த பகுதியை சோதனை செய்து பார்த்தபோது டெட்டனேற்றர் குச்சி 2, அதற்கு பயன்படுத்தப்படும் 100மீற்றர் வயர் ரோல் எபவற்றை அவதானித்ததாக தெரிவித்தனர்.
எனினும் மண்ணில் புதையுண்டு கிடப்பதால் மேலும் வெடிபொருட்கள் அதனுள் இருக்கலாம் என்று தெரிவித்த பொலிசார் சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிபடையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை ஆழமாக்கி சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM