(எம்.மனோசித்ரா)
பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் நேற்றுப் புதன்கிழமை ஆரம்பித்த வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது சம்பள உயர்வு தொடர்பில் அண்மையில் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரையில் தீர்வெதுவும் வழங்கப்படாமையின் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகள் ஸ்தம்பித நிலையை அடைந்தன.
இதேவேளை சம்பள உயர்வு தொடர்பில் எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு உயர் கல்வி அமைச்சினால் தீர்வு வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அழுத்தம் கொடுப்பதற்காகவே போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்ததாகவும் கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நிதி அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் எந்தவிதத் தீர்வும் எட்டப்படவில்லை என அனைத்து பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் தம்மிக எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் மாயாதுன்னே, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரையில் திறைசேரியில் இருந்து மேலதிகக் கொடுப்பனவை வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொடுப்பனவு விடயத்தை ஏற்றுக்கொள்வதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் பல்கலைக்கழக தொழிற்சங்கம் தமக்கு ஏதும் தெரி விக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM