31ஆவது மகாவலி விளையாட்டு விழாவின் தீ பந்தம் தாங்கிய வாகனப் பேரணி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று காலை கொழும்பு, மகாவலி கேந்திரத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.
மகாவலி வலயங்களைச் சார்ந்த விவசாயிகளின் பிள்ளைகளது விளையாட்டுத் திறமைகளை வளர்த்தெடுத்து, அவர்களது ஆற்றல்களை சர்வதேசம் வரை கொண்டுசெல்லும் நோக்கில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மகாவலி விளையாட்டு விழா 31ஆவது தடவையாகவும் செப்டெம்பர் 07, 08 ஆகிய தினங்களில் மெதிரிகிரியவில் இடம்பெறவுள்ளது.
சர்வ மத ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் தீ பந்தம் ஏந்திய வாகன பேரணி உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ்.திசாநாயக்க, மகாவலி கேந்திரத்தின் பணிப்பாளர் தயாஷித திசேரா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM