சஜித்தின் கீழுள்ள மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் விசாரிக்க விசேட ஆணைக்குழு 

Published By: Digital Desk 3

28 Aug, 2019 | 05:22 PM
image

மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்றுள்ள 1.2 பில்லியன் ரூபா மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து மின்சாரம் மற்றும் சக்திவலு அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது கேள்வி எழுப்பப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு முயற்சித்துவரும் சஜித் பிரேமதாஸவின் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பின் கீழேயே மத்திய கலாசார நிதியம் காணப்பட்டது. 

இந்நிலையில் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர்களில் ஒருவரான அமைச்சர் ரவி கருணாநாயக்கவே, மத்திய கலாசார நிதியத்திலிருந்து 1.2 பில்லியன் ரூபா நிதி காணாமல்போயிருப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார். 

அதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக பிரதமரால் அவரது செயலளார் சமன் ஏகநாயக தலைமையில் விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40