பிரபாகரன் போன்று ஒருவர் இனியும் வரவே முடியாது 

Published By: MD.Lucias

14 May, 2016 | 10:45 AM
image

இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம் மீண்டும் வரு­வார்கள் என்­ப­து­போ­லவும், உலகம் நெருப்பால் மூடப்­படும் அல்­லது இந்த ஆண்­டுடன் உலகம் அழியும் என்ற சிலரின் கற்­பனை எதிர்­வு­கூ­றலைப் போன்­றதே வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் கருத்து. பிர­பா­கரன் போன்ற ஒருவர் இனிமேல் தலை­தூக்­கவே முடி­யாது என வட­மா­காண ஆளுநர் ரெஜினோல் குரே தெரி­வித்தார். ஊட­கங்­களில் கூறு­வ­தைப்­போல வடக்கில் குற்­ற­செ­யல்கள் அதி­க­ரிக்­க­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப் பில் கலந்­து­கொண்­டி­ருந்த போதே வட­மா­காண

ஆளுநர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது

தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

தமிழ் மக்­க­ளைப்போல் எவரும் யுத்த கஷ்­டங்­களை அனு­ப­வித்­தி­ருக்க மாட்­டார்கள். இழப்­புகள் என்றால் என்ன, வலி என்­பது என்ன என்­பது பற்றி எம்­மை­வி­டவும் அவர்­க­ளுக்கு அதிகம் தெரியும். அவ்­வாறு இருக்­கையில் மீண்டும் ஒரு­முறை அவர்கள் யுத்­த­மொன்று வேண்டும் என்ற எண்­ணத்­துக்கு ஒரு­போதும் வரப்­போ­வ­தில்லை. எனினும் அர­சியல் வாதி­க­ளுக்கு மீண்டும் மீண்டும் யுத்தம் ஒன்று தேவைப்­ப­டு­கின்­றது. தமது அர­சியல் கொள்­கைகள் தொடர்ந்தும் இருக்­க­வேண்டும் என்றால், அதில் அவர்கள் குளிர்­காய வேண்டும் என்றால் அவர்­க­ளுக்கு குழப்பம் அவ­சி­ய­மா­கின்­றது. அதனால் தான் பிர­பா­கரன் மீண்டும் வருவார், நாட்டை பிரித்­ததுத் தருவார் என்ற கற்­பனைக் கதை­க­ளை­யெல்லாம் கூறு­கின்­றனர்.

எவ்­வாறு இருப்­பினும் எதிர்­வு­கூ­றல்கள் பல இந்த உல­கத்தில் உள்­ளது. இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் உல­கத்தை காப்பார் என்­ப­து­போ­லவும், நபிகள் வருவார் என்­பது போலவும் அதேபோல் உலகம் நெருப்பால் மூடப்­படும் அல்­லது இந்த ஆண்­டுடன் உலகம் அழியும் என்­றெல்லாம் உலகில் பலர் எதிர்­வு­கூறி வரு­கின்­றனர். அவ்­வா­றான ஒரு கற்­பனை எதிர்­வு­கூ­றலைப் போன்­றதே வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் கருத்து. இவர்­களின் கருத்­து­க­ளை­யெல்லாம் உண்­மைகள் என நம்பி அவர்­களின் பின்னால் மக்கள் செல்லப் போவ­தில்லை. கூட்டம் சேர்க்கும் இவர்­களின் தந்­தி­ரத்தை கண்டு மக்கள் ஏமாறமாட்­டார்கள். ஒவ்­வொரு முறையும் இவர்கள் புலி­களை நினை­வு­கூர ஆட்­களை சேர்க்கும் போதெல்லாம் மக்கள் அவர்­க­ளுடன் செல்­வ­தில்லை. ஆகவே அவர்­களின் அர­சியல் கொள்கை அவ்­வாறு இருக்கும் பட்­சத்தில் மாற்றம் ஏற்­ப­டாது. வடக்கில் உள்ள ஒரு­சி­லரின் செயற்­பா­டுகள் தெற்கின் இன­வா­தத்தை பலப்­ப­டுத்தும். அதேபோல் தெற்கில் உள்ள ஒரு­சி­லரின் இன­வாதம் வடக்கில் இன­வாத கொள்­கையை பலப்­ப­டுத்தும். ஆகவே அவற்றை ஊட­கங்­களும் பூதா­க­ர­மாக்கி விளம்­ப­ரத்தை அதி­க­ரித்­த­வண்ணம் உள்­ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58