பாதுகாப்புக் காரணங்களுக்காக சிலாபம், முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தின் தேர்த் திருவிழாவில் நேர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறுகிறது. கொடியேற்ற தினம் முதல் பொலிஸ், இராணுவத்தின் பலத்த பாதுகாப்புடன் திருவிழா நிகழ்வு கள் நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழழை நடைபெறவுள்ள தேர்த் திருவிழா நிகழ்வுகள் வழமைக்கு மாறாக நேர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 12 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு வசந்த மண்டப பூஜை ஆரம்பமாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 9.00 மணிக்கு அன்னை வடிவாம்பிகா தேவி சமேதரராய் முன்னைநாதப் பெருமானை பரிவார மூர்த்திகளுடன் திருத் தேருக்கு எழுந்தருளச் செய்யப்படும்.
காலை 10.00 மணிக்கு பஞ்ச ரதங்களும் புறப்படும். பிள்ளையார், சுப்பிரமணியர் சுவாமி, அம்பாள், சண்டேஸ்வரர் என முறையே 5தேர்களும் திருவீதி உலா வருவதுடன் சுமார் ஒரு மணி 45 நிமிடத்தில் மீண்டும் தேர்கள் ஆலயத்தை வந்தடையவுள்ளன.
திருவீதி உலாவின்போது அர்ச்சனை தட்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பகல் 12.00 மணிக்கு உச்சிகாலப் பூஜையுடன் மாலை 5.00 மணி வரை சுவாமி, அம்பாள் பரிவார மூர்த்திகள் தேரிலேயே எழுந்தருளியிருப்பர்.
பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அடியார்களின் அர்ச்சனைத் தட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் சுவாமி, அம்பாளை பச்சை பட்டாடை அணிவித்து (பச்சை சாத்தி) கோயிலுக்கு எழுந்தருளச் செய்வார்.
வழமையாக காலை 10.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் 11.00 மணிக்கு சுவாமி, அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளலும் பகல் 12.00 மணிக்கு உச்சிகாலப் பூஜையுடன்தேர்கள் புறப்படுவதுமாக இருந்து வந்துள்ளது. எனினும் இம்முறை பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ முன்னேஸ்வர தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM