ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் நிலங்களை மீட்டெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.; ரவிகரன்

Published By: Digital Desk 4

27 Aug, 2019 | 05:36 PM
image

அண்மைக் காலமாக பல வழிகளிலும் ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை, மீட்டெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

பண்டாரவன்னியனின் 216ஆம் ஆண்டு வெற்றி நாளில் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பண்டார வன்னியன் சிலைக்கு ரவிகரன் அஞ்சலி செலுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து 60வெள்ளையர்களை பண்டார வன்னியன் ஒரே வாள்வீச்சில் சாய்த்ததாக கூறப்படும் கற்பூரப்புல் வெளியிலும் தனது அஞ்சலிகளைச் செலுத்தியதனையடுத்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழனுடைய வீரம் செறிந்த தினம் இன்றாகும், அன்னிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக பண்டாரவன்னியன் போரிட்ட பல சம்பவங்களில் இன்றைய நாள் மிக முக்கியமான நாளாகும்.

இந்த நாள் முல்லைத்தீவிலே அமைந்திருந்த அன்னியருடைய கோட்டைக்குள்ளே மாவீரன் பண்டாரவன்னியன், தனது படைகளுடன் புகுந்து, அன்னியருடைய ஆயுதங்களைக் கைப்பற்றி எடுத்துவரும் அளவிற்கும், பல அன்னிய எதிரிகளை கொண்றொழித்த தினமாகவும் இன்றைய நாள் நினைவுகூரப்படுகின்றது.

ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் வந்த பல அன்னிய எதிரிகளை வீழ்த்தி தமிழனுக்குப் பெருமை சேர்த்த தமிழ் மறவர்களை நினைவுகூரும் நாளாக இன்றையநாள் காணப்படுகின்றது.

இன்றுகூட அன்னிய ஆதிக்க சக்திகள் எங்களுடைய தமிழ் பூர்வீக நிலங்களை, பறித்தெடுத்துக் கொண்டிருக்கின்றன.

நிச்சயமாக இவ்வாறு ஆக்கிரமிக்கப்படும் நிலங்கள் மீட்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

ஆக்கிரமிப்புக்கள் எந்த வடிவத்தில் நுழைந்தாலும் அதை எதிர்த்து, எங்களுடைய நிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நிலையிலிருந்த, எங்கள் தமிழ் மறவர்களை வாழ்த்தி வணங்குகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04