சஜித் உட்­பட நால்­வரின் பெயர்கள் பரிந்­துரை - கபீர் ஹாசீம் 

Published By: Vishnu

27 Aug, 2019 | 10:05 AM
image

(ஆர்.யசி)

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரேமதா­சவின் பெய­ருடன் மேலும் நால்­வரின் பெயர் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், இம்­மாத இறு­திக்குள் பல கேள்­வி­க­ளுக்கு விடை கிடைக்கும் எனவும் கட்­சியின்  தவி­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசீம் தெரி­வித்தார். 

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்த ஐக்­கிய தேசிய கட்­சியின் நிலைப்­பாடு என்ன என்­பதை வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில், 

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து அறி­விக்க இப்­போது  எந்த அவ­சி­யமும் இல்லை. இன்­னமும் ஜனா­தி­பதி தேர்தல் குறித்த அறி­விப்­புகள் வரவும் இல்லை. கட்­சிக்குள் ஒரு சிலர் தமது கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். அது அவர்­களின் ஜன­நா­யக உரிமை. ஆனால் கட்­சி­யாக இன்­னமும் இறுதித் தீர்­மானம் எடுக்­க­வில்லை. எவ்­வாறு இருப்­பினும் இம்­மாத இறு­திக்குள் அறி­விப்­புகள் பல வெளி­வ­ர­வுள்­ளன. 

அதில் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்த அறி­விப்­பையும் எதிர்­பார்க்க முடியும். அடுத்த வாரம் ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­குழு கூடும். இதில் பிர­தான கார­ணிகள் குறித்தும் கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள கருத்து வேறு­பா­டுகள் குறித்தும் கவனம் செலுத்­தப்­படும். அத்­துடன் கூட்­ட­ணிக்­கான யாப்பு உரு­வாக்கம் குறித்தும் கலந்­து­ரை­யாட  வேண்­டி­யுள்­ளது. ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்த வினா­வுக்கு, அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவின் பெயர் அதி­க­மாக பரிந்­து­ரைக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதேபோல் மேலும் நால்வர் பெயர்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­களும் அவ்­வப்­போது ஊட­கங்கள் முன்­னி­லையில் தம்மை வேட்­பா­ள­ராக கூறி­கின்­றனர். கட்சி சார்­பிலும் சிலரின் பெயர்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.  சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய, சரத் பொன்­சேகா ஆகி­யோரின் பெயர்­க­ளையும்  ஊட­கங்­களில் அவ­தா­னிக்க முடி­கின்­றது. எவ்­வாறு இருப்­பினும் கட்­சிக்­கென்ற ஒழுக்கம் நடை­மு­றைகள் உள்­ளன. எனவே கட்­சி­யாக எடுக்கும் தீர்­மா­னங்கள் தனிநபர் தீர்­மா­ன­மாக அமை­யாது. இது கட்­சியின் செயற்­குழு தீர்­மா­ன­மா­கவே அமையும். 

இம்­மாத இறு­திக்குள் ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் முன்­வைக்­கப்­பட்டுள்ள கேள்­வி­க­ளுக்கு விடைகிடைக்கும். எனி னும் கட்சிக்குள் பிளவுகள் எதுவும் ஏற்படவில்லை. கட்சியை பிளவுபடுத்த இடமளிக்கப்போவதும் இல்லை. இறுதியாக கட்சியின் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய இறுதி நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21