பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கம் மற்றும் நிர்வாக அதிகாரிகள் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
அதன்படி அவர்கள் நாளையும் நாளை மறுதினமும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
இது தொடர்பாக சங்க உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தவும் ஆணையை பெறவும் இன்று பகல் கூட்டம் ஒன்றினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்துள்ளனர்.
இக் கூட்டத்தில் சகல தொழிற் சங்கங்களினதும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கமைய வழங்கப்பட்ட கொடுப்பனவு ரூபா 10,000 அரச ஊழியர்களுக்கும் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்ட போதும், மேலும் 15 சதவீதம் ஊழியர்களுக்கு இன்னும் இவை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படாமல் உள்ளது.
இந்த முரண்பாட்டினை உடனடியாக நீக்கல், 2016.08.08 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கமைய வீட்டுக்கடன் வழங்கல், நிதித் தொகையினை அதிகரித்தல், ஆட்சேர்ப்பு முறைமையில் சேவையாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளல், 2013ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட வேறு மொழித்தேர்ச்சிக்கான கொடுக்கப்பட்ட கொடுப்பனவினை மீண்டும் வழங்கல் போன்ற பல கோரிக்கைகள் தொடர்பாக இரு முறை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM