சிறிய மீன்பிடிப் படகு தொடர்பாக குறுஞ்செய்தி வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை கடற்றொழில் நீரியல் வளங்கல் அபிவிருத்தி அமைச்சு அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் அடிப்படையில், கடலுக்கு மீன்பிடிக்காக செல்லும் சிறிய மின்பிடிப் படகுகள் காலநிலை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு இந்த குறுஞ்செய்திகள் மிகவும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்று வீசும் திசை, கடல் கொந்தளிப்பு உள்ள தினங்கள், சீரற்ற காலநிலை, அடைமழை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே மீனவர்களுக்கு அனுப்பி வைக்க இந்தக் குறுஞ்செய்திச் சேவை பயன்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக கொழும்பு, காலி கரையோரப் பகுதிகளில் உள்ள மீன்பிடிப் படகுகளுக்கு இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்தச் சேவை நாட்டின் ஏனைய கரையோரப் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் கடற்றொழில் நீரியல் வளங்கல் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM